1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் அடுக்கு மொழியில் பேசினால் மட்டும் போதாது...செயலில் ஈடுபட வேண்டும் - சசிகலா..!

Q

தஞ்சாவூரில் நடைபெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து டாஸ்மாக் நிறுவனத்தில்மிக பெரிய தவறு நடந்துள்ளது. ஏன்னென்றால் 100% டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதற்கு கலால் வரி விதிக்கப்படும் .இதனால் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.

அந்த பணத்தை வைத்து மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்துவது வழக்கம். ஆனால் திமுக ஆட்சி பொறுபேற்றதில் இருந்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்த்தி உள்ளதாக கூறினார். இதற்கு டாஸ்மாக் நிறுவனம் உரிய வரியை கட்டவில்லை. இதனால் தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து பா.ஜ.க.வுடன் மீண்டும் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளது குறித்த செய்தியாளர் கேள்விக்கு,’’தன்னுடைய நிலைப்பாடு இன்று என்னால் கூறமுடியாது. தேர்தல் நேரம் நெருங்கும் நேரத்தில் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் அடுக்கு மொழியில் பேசினால் மட்டும் போதாது. செயலில் ஈடுப்பட வேண்டும். இதனை தான் முதலில் இருந்து வலிவுறுத்தி வருவதாக கூறினார்.இந்த ஆட்சியை வரும் 2026 ல் மக்கள் மாற்றிவிடுவார்கள்.இது கண்டிபாக நடக்கும்.

திமுக வார்த்தை ஜாலம் செய்து கொண்டும், மீடியாவை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தால் ஆட்சியில் நிரந்தரமாக இருந்தால் என்ற எண்ணம் உள்ளது. மேலும் 50 ஆண்டுகால கனவு முடிவுக்கு வர உள்ளதாக கூறினார்.

Trending News

Latest News

You May Like