1. Home
  2. தமிழ்நாடு

இனி சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல... ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் உயர்வு..!

1

 தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயரத்தொடங்கிய நிலையில், இந்த  ஏப்ரல் மாதம் முதலில் இருந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 360 உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது. ஆனால், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 105 ரூபாய் உயர்ந்து, ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, ரூ.52,920-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,333-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 86 ரூபாய் உயர்ந்து, ரூ.5,419-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 85,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து, ரூ.87,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.87.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like