1. Home
  2. தமிழ்நாடு

கூடலுாரில் ஐ.டி. பார்க் வருமா ? கேள்விக்கு அமைச்சர் தியாகராஜன் விரக்தி பதில்..!

1

கூடலுாரில் ஐ.டி., பார்க் அமைக்கக் கோரிய அ.தி.மு.க., உறுப்பினருக்கு, சட்டசபையில் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் அளித்த பதில்: இந்த கூட்டத்தொடரிலே, இந்த அவையில் நான் என்னுடைய துறையில் இருக்கும் சிக்கல்களை கூறி இருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் போல் எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும், எங்கள் துறையில் செயல்படுவது இல்லை.

 

சின்ன பங்கு தான், எங்கள் துறையில் செயல்படுகிறது. பாக்கி, டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில்துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும் அது தான் 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கோ, அவரிடம் கேட்டால், அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். அது எங்களிடம் இல்லை. இவ்வாறு தியாகராஜன் பேசினார்.

Trending News

Latest News

You May Like