1. Home
  2. தமிழ்நாடு

என்ன ஆனாலும் பரவாயில்லை; தமிழகத்துக்கு தண்ணீர் விடமாட்டோம்..!

Q

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக விவசாயிகள் மற்றும் ரைதா ஹிதாராக்ஷனா சமிதி அமைப்புகள் போராட்டம் நடத்தின. மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி கட்சியான திமுகவின் நலன்களைப் பாதுகாக்க கர்நாடகா காங்கிரஸ் அரசு ஆர்வமாக இருப்பதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மாளவல்லியில் உள்ள ஷிவா நீர்த்தேக்கத்தை நிரப்புவதற்காக கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதாகவும், அங்கிருந்து பெங்களூருக்கு குடிநீர் தேவைக்கு நீர் கொண்டுசெல்லப்படுவதாகவும் அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: “கேஆர்எஸ் அணையிலிருந்து பெங்களூருக்கு தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்துக்கு அல்ல. என்ன ஆனாலும் பரவாயில்லை. காவிரி நதி நீரை தமிழகத்துக்கு விடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாய்கிறது என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க இந்த அரசாங்கத்தில் நாங்கள் முட்டாள்கள் அல்ல. பெங்களூருவுக்கு தண்ணீர் பம்ப் செய்யும் இடத்தில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தண்ணீர் பம்ப் செய்யப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நீர் இருக்க வேண்டும். இதனால் அந்த அளவை பராமரிக்க தண்ணீர் விடுவிக்கப்பட்டது. பெங்களூரின் தண்ணீருக்காக, நீர் திறக்கப்பட்டது” என்றார்.

Trending News

Latest News

You May Like