1. Home
  2. தமிழ்நாடு

ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை

Q

பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், இன்று (ஜன.,03) மதுரையில் இருந்து நீதி கேட்பு பேரணி துவங்க உள்ளது. இந்நிலையில், பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி, தி.மு.க., நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி, பா.ஜ.,மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது தி.மு.க., அரசு.

இந்த தி.மு.க., ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? தி.மு.க., அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா? இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like