1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் மறைவுக்கு மரியாதை அளித்த முதல்வருக்கு நீங்கள் செலுத்தும் நன்றி கடனா இது? பிரேமலதாவை வெளுத்து வாங்கிய திருச்சி சூர்யா!

1

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

முதல்வர் ஸ்டாலினால் நடக்க முடியவில்லை, அவரது கைகளில் நடுக்கம் உள்ளது. அவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர் வேட்டி சட்டை அணியாமல், பேண்ட் அணிந்துகொள்கிறார். கை நடுக்கத்தை மறைப்பதற்காக எப்போதும் பேண்ட் பாக்கெட்டிற்குள கைகளை மறைத்து வைத்துக்கொள்கிறார் என்று கூறினார் பிரேமலதா.

பிரேமலதாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா, அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், எல்லையை மீறிய விமர்சனம் என கண்டனம் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் என்றால் வேட்டி சட்டை தான் அணிய வேண்டும் என்று சட்டமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆக இருந்தபோது ஒரு நாள் கூட வேஷ்டி அணிந்ததில்லை. அப்போ அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்றும் பிரேமலதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் திருச்சி சூர்யா. மேலும் ஊரில் இருப்பவர்கள் இதே போல் உங்கள் கணவரை விமர்சனம் செய்தபோதும் பத்திரிகையாளர்கள் முன்பு ஒப்பாரி வைத்து புலம்பத் தெரிந்த உங்களுக்கு முதலமைச்சரை விமர்சனம் செய்யும் போது உங்களுக்கு அந்த நாகரிகம் தெரியவில்லையா? என்றும் விளாசியுள்ளார்.

கேப்டன் உடல்நிலை குன்றி இருந்த சமயத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் யாரும் அவரை விமர்சனம் செய்யக்கூடாது என்றும், உங்கள் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் சேர வந்த பொழுது கேப்டனுக்கு உடம்பு முடியாத நேரத்தில் இப்படி செய்தால் அவர் மனம் புண்படும் எனவே அவர்களை சேர்க்காதீர்கள் என்று கூறி தவிர்த்து, கேப்டன் மறைவுக்கு தமிழக அரசால் அரசாங்க மரியாதை அளித்த முதல் அமைச்சருக்கு நீங்கள் செலுத்தும் நன்றி கடனா இது? என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார் திருச்சி சூர்யா.

Trending News

Latest News

You May Like