1. Home
  2. தமிழ்நாடு

நடிகை தாரணிக்கே இந்த நிலையா ? பிரபல தமிழ் நடிகை ஓபன் டாக்!

1

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் கமலின் தங்கையாக அறிமுகம் ஆனவர் நடிகை தாரணி. அதைத் தொடர்ந்து பாலைவன பறவைகள், பெரிய மருது உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ள தாரணி, தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தனியார் யூடியூப் சானல் ஒன்றுக்கு இவர் அளித்துள்ள பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த கேள்விக்கு இவர் அளித்துள்ள பதிலில், 'ஒரு பெண்ணாக இருந்தால் திரைத் துறையில் அதை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. முதல் இரண்டு மூன்று படங்களில் எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஆனால்  கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்தேன்.  அப்போது தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. 

அந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இரண்டு பேருமே என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யுமாறு கேட்டார்கள். இயக்குனர் கூட பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் தான் என்னை அதிகம் தொந்தரவு செய்தார்.

“தங்கச்சி ரோலில் இருந்த உங்களை ஹீரோயினாக ஆக்கியிருக்கோம்" என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார். அவரிடம் தப்பா எடுத்துக்காதீங்க நான் அப்படிப்பட்டவள் இல்லை. நீங்கள் என்னைப் பற்றி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். யாராவது என்னை தப்பாக சொன்னார்கள் என்றால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்'  என்று சொன்னேன்.

திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த கேள்விக்கு இவர் அளித்துள்ள பதில்தான் அந்த பரபரப்புக்கு காரணம்.  'ஒரு பெண்ணாக இருந்தால் திரைத்துறையில் அதை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. முதல் இரண்டு மூன்று படங்களில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆனால்  கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்தேன்.  அப்போதுதான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தது. 

அந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இரண்டு பேருமே என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யுமாறு கேட்டார்கள்.

இயக்குனர்  கூட பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் தான் என்னை அதிகம் தொந்தரவு செய்தார். “தங்கச்சி ரோலில் இருந்த உங்களை ஹீரோயினாக ஆக்கியிருக்கோம்" என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார். அவரிடம் தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படிப்பட்டவள் இல்லை. நீங்கள் என்னைப் பற்றி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். யாராவது என்னை தப்பாக சொன்னார்கள் என்றால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்'  என்று சொன்னேன்.

அப்போது இந்த மாதிரி ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரும் அதை விட்டுவிட்டார்.  ஆனால் இதை மனதிலேயே வைத்திருந்து பழி வாங்கினார். கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த ஒளிப்பதிவாளர் அதிகபட்சமான சூடு கொண்ட ஒரு லைட்டை எனது முகத்தில் படுமாறு படார் என்று திருப்பினார். அதன் எரிச்சலில் அம்மா என்று அலறி விட்டேன்.  இந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது'  என்று அந்த  பேட்டியில் நடிகை தாரணி தெரிவித்துள்ளது இப்போது கோலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Trending News

Latest News

You May Like