இது தேவையா குமாரு ? டார்ச்சர் செய்யும் அரசி.. திட்டி தீர்க்கும் அப்பா...!

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உன்னை நான் எவ்வளவு நம்புனேன். என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லனும் உனக்கு தோணலைல என கேட்கிறாள் கோமதி. அதற்கு மீனா, ஏற்கனவே அரசி பிரச்சனை வேற நடந்துட்டு இருந்தது அத்தை. அது மட்டும் இல்லாம பணம் கொடுத்தாலும் கட்டாயம் வேலை கிடைக்குமான்னு தெரியாம இருந்தது. அத்தை சொல்லி உங்களையும் பதட்ட பட வேண்டாம்ன்னு தான் சொல்லலை என்கிறாள்.
என் பொண்ணை விட உன்கிட்ட தான் எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கேன். ஆனால் நீ என்கிட்ட மறைச்சுட்டீல. இனிமே என்கிட்ட நீயும் பேசாத. செந்திலும் பேச வேண்டாம் என சொல்லிவிடுகிறாள். கோமதி போனதும் மயில் தன்னுடைய பங்குக்கு, அத்தை எங்களை விட உன்மேல தான் பாசமா இருந்தாங்க.
அத்தைக்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல என்கிறாள். அப்போது ராஜி, அக்கா சொல்லாம இருந்தால், அதுக்கு ஒரு காரணம் இருக்கும் அக்கா என சொல்கிறாள். இதனிடையில் பழனி அம்மாவை பார்ப்பதற்காக சக்திவேல் வீட்டுக்கு வருகிறான். அப்போது அரசி பேச, பழனி மூஞ்சியை திருப்பி கொள்கிறான். இன்னும் எத்தனை நாளைக்கு பேசாம இருப்ப. பாவம் சின்ன பொண்ணுடா என்கிறார் பாட்டி. அதனை தொடர்ந்து செந்திலுக்கு வேலை கிடைத்தது பற்றி சொல்கிறான் பழனி.
அதன்பின்னர் அரசியிடமும் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு கிளம்புகிறான். கரெக்டாக அப்போது அண்ணன்கள் வர, இவுங்க கிட்ட வாயை கிடைத்து மாட்டிக்க கூடாது என நினைத்து எஸ்கேப் ஆகிறான். இதனையடுத்து குமாருக்கு பெண் பார்த்த இடத்தில் இருந்து முத்துவேலுக்கு போன் வருகிறது. இதனை சக்திவேல் கவனித்து விட்டு அண்ணன் போனதும், குமாரை திட்ட ஆரம்பிக்கிறான். ஒழுங்கா அந்த அரசி கல்யாணத்தை நிறுத்துனதோட விட்டு இருக்கலாம்ல.
ஒன்னும் இல்லாத அந்த பாண்டியன் வீட்டு பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்க. உன்னையெல்லாம் என் பையன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு என திட்டுகிறான் சக்திவேல். அப்பா பேச்சைக்கேட்டு அரசி கல்யாணத்தை நிறுத்தி, இப்ப அவளிடம் மாட்டிக்கொண்டு தவிப்பதுடன், அப்பாவும் திட்டுவதால் தனது நிலைமையை நினைத்து நொந்து கொள்கிறான் குமார்.
இதனிடையில் பாண்டியன் வீட்டில் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும்போது செந்தில், மீனா மட்டும் வராமல் இருக்கிறார்கள். கதிர் போய் அவர்களை அழைத்து வருகிறான். அப்போது மீனா மாமனார், மாமியாரை சமாதானம் செய்வதற்காக பேசுகிறாள். ஆனால் பாண்டியன் கடுப்பாகி சாப்பிடாமல் எழுந்து போய்விடுகிறான். இதனால் கோமதியும் டென்ஷனாகி வாயை மூடிட்டு சாப்பிட மாட்டீங்களா என எல்லாரையும் போட்டு திட்டுகிறாள்.