இப்படியும் ஒரு மரபா..? இரட்டை குழந்தை பிறந்தால் சகோதரன் சகோதரியுடன் திருமணம்!
தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கத்தின்படி, இரட்டைக் குழந்தைகள் ஆண் - பெண்ணாக பிறந்தால் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். அவர்களது நம்பிக்கையின்படி, முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் இரட்டை குழந்தைகளாக பிறப்பார்கள் என்பதால் அவர்களை சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதை மரபாகக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் இது ஒரு மரபு சார்ந்த திருமணம் மட்டும்தான் என்றும், அவர்கள் வளர்ந்ததும் தாங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்த தாய்லாந்து வீடியோ வைரலாகியுள்ள நிலையில் புதிய விதத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது போல தாய்லாந்தில் செய்யப்படாமல் இருப்பதும், அந்த குழந்தைகள் விவரம் தெரிவதற்கு முன்பே அவர்கள் விருப்பமின்றி இவ்வாறாக திருமணம் செய்து வைக்கப்படுவதும் சரியல்ல என்று பலர் கருத்துகளை கூறி வருகின்றனர்.
Four-year-old twins in Thailand were symbolically married in a lavish traditional ceremony to bring good luck and ward off misfortune, in accordance with long-held Thai Buddhists’ beliefs. pic.twitter.com/5NXvj28Nvt
— China Daily (@ChinaDaily) July 4, 2025
Four-year-old twins in Thailand were symbolically married in a lavish traditional ceremony to bring good luck and ward off misfortune, in accordance with long-held Thai Buddhists’ beliefs. pic.twitter.com/5NXvj28Nvt
— China Daily (@ChinaDaily) July 4, 2025