தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வருகிறதா? புகாருக்கு தொலைபேசி எண் அறிவிப்பு !

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 7 கோடியே 17 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி இதுவரையில் போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் பலருக்கு தடுப்பூசி போடாமலேயே போட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இதுபோன்ற தவறு எப்படி நடக்கிறது என்பதை சுகாதாரத்துறை ஆய்வு செய்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செல்போன் நம்பரை பதிவு செய்யும் போது தவறுதலாக ஒரு எண்ணை மாற்றி பதிவு செய்ததால் இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டதாக தெரிகிறது என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்.செல்வ விநாயகம் தெரிவித்தார்.
ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால், 5 பேரும் ஒரே எண்ணை கொடுக்கலாம். 4 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கலாம். ஒருவர் போடாத நிலையில் அவருக்கும் தவறான பதிவால் தடுப்பூசி போட்டதாக தகவல் சென்று விடுகிறது என்றும் இது முகாம்களில் தற்காலிக ஊழியர்கள் பதிவு செய்யும் போது கவனக் குறைவால் ஏற்படுகிறது எனவும் கூறினார்.
இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், செலுத்திக் கொண்டதாக யாருக்கேனும் தகவல் வந்தால் அவர்கள் உடனடியாக கீழ்கண்ட எண் களுக்கு புகார் தெரிவிக்கலாம்.
மாவட்டம் வாரியாக புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் விவரம்:-
- அறந்தாங்கி- 9442962738
- அரியலூர்- 9865177416
- ஆத்தூர்- 9787117030
- சென்னை- 9941491164
- செய்யாறு- 9500659593
- கோயம்புத்தூர்- 9894338846
- செங்கல்பட்டு- 9751487318
- கடலூர்- 9443737905
- தர்மபுரி- 9790284264
- திண்டுக்கல்- 8754541244
- ஈரோடு- 9894338846
- கள்ளக்குறிச்சி- 9443737905
- காஞ்சிபுரம்- 9751487318
- கரூர்- 8012015540
- கோவில்பட்டி- 9092280164
- கிருஷ்ணகிரி- 9488091641
- மதுரை-9244861327
- மயிலாடுதுறை- 7904821308
- நாகப்பட்டினம்- 7904821308
- நாகர்கோவில்- 9791582914
- நாமக்கல்- 9994724455
- பழனி- 9843557724
- பரமக்குடி- 9994051625
- பெரம்பலூர்- 9443835677
- பூந்தமல்லி- 7708991059
- புதுக்கோட்டை- 9443046324
- ராமநாதபுரம்- 9994051625
- ராணிப்பேட்டை- 8754224556
- சேலம்- 9842946703
- தென்காசி- 8248722957
- சிவகங்கை- 9442106748
- சிவகாசி- 9500925440
- தஞ்சாவூர்- 9865177416
- தேனி- 9894887136
- திருவள்ளூர்- 7708991059
- திருவாரூர்- 9442456080
- திருச்சி- 9944842742
- திருநெல்வேலி- 9442126179
- திருப்பத்தூர்- 9842433364
- திருப்பூர்- 9677447084
- திருவண்ணாமலை- 7299384974
- தூத்துக்குடி- 9092280164
- ஊட்டி- 9585018777
- வேலூர்- 9952827303
- விழுப்புரம்- 9865552258
- விருதுநகர்- 9500925440
newstm.in