1. Home
  2. தமிழ்நாடு

தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை?

Q

சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

 

சென்னையில் GCC முறையில் 600 மின்சார பேருந்துகளை தனியார் இயக்க ஒப்பந்த புள்ளியை மாநகர போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. அதன்படி, மின்சார பேருந்துகளுக்கான நடத்துநர் நியமனம் போக்குவரத்து கழகம் சார்பிலும், பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் உள்ளிட்டவை Gross Cost Contract அடிப்படையில் தனியார் மூலமாகவும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி படிவங்களை https://tntenders.gov.in/. heetps://mtcbus.tin.gov.in/, https://tnidb.tn.gov.in இணையதள முகவரியில் பார்வையிட்டு கொள்ளலாம். ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளி படிவங்களை அரசு இணையதள முகவரி https://tntenders.gov.in/nicgep/app-பதிவேற்றம் செய்யலாம்.

ஒப்பந்தப்புள்ளி படிவங்களை இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவங்களை 10.3.2025 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 03.04.2025 அன்று மாலை 4 மணிவரை ஆகும்.

Trending News

Latest News

You May Like