கள் விஷம் என்றால் டாஸ்மார்க் மிளகு ரசமா..? சீமான்..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். ஜூன் 15ஆம் தேதி குலசேகரபட்டினம் மற்றும் சில பகுதிகளில் கள்இறக்க அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அனுமதி கிடைக்காததால், பனைமரம் ஏறும் போராட்டம் நடத்தப்போவதாக சீமான் அறிவித்தார். இதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்றும், இந்தியாவில் கல் இறக்க அனுமதி இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள் இறக்கும் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தால், ஐந்து பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்றார். ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால், தடையை மீறி ஒட்டுமொத்தமாக போராட்டம் நடத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவில் பல மாநிலங்களில் கல் இறக்க அனுமதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை விதிக்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அந்த கருத்துருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது" என்று சீமான் கூறினார். மேலும், கள் விஷம் என்று சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் மட்டும் என்ன மிளகு ரசமா என்று சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பினார்.
கல்லுக்கு தடை விதித்தால் தான் டாஸ்மாக் நிறுவனம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும். கல் உடல் நலத்திற்கு நல்லது என்றும் சீமான் கூறினார். " கள் என்றால் விஷம் என்று கூறுகிறார்கள் ஆனால் டாஸ்மார்க் என்றால் மிளகு ரசமா" என்ற சீமானின் கேள்வி, டாஸ்மாக் விற்பனையை ஊக்குவிப்பதற்காகவே கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மறைமுகமாக சாடியது. கள்ளுக்கு தடை விதிப்பதால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு லாபம் என்றும், இது உடல் நலத்திற்கு கேடு இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.மேலும் டாஸ்மாக் குடித்து இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் கள் குடித்து உயிரிழந்தவர்கள் இல்லை என்று கூறினார்.
தொடர்ந்து பாஜக சார்ப்பில் நடத்தப்படும் முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு,’’முருகன் மாநாடு என்பது மார்க்கெட்டிங். பாஜகவினர் ராமரை வயது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கங்களை எழுப்பி வந்தனர். இந்த சர்ச்சை இராமன் கோயில் கட்டப்பட்ட வரை எந்த சர்ச்சை தொடர்ந்தது மேலும் முழுமையாக ராமர் கோவில் கட்டி முடிக்காத போது பிரதமர் மோடி அதனை திறந்து வைத்தார். அந்த காலகட்டத்தில் அயோத்தியில் பாஜகவை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் அப்போது ஆகிலேஷ் ஒரு தாழ்த்தப்பட்ட நபரை நிறுத்தி பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். இதனால் அயோத்தியில் உள்ள ராமருக்கு மார்க்கெட் போய்விட்டது.
அதே போல் வருஷ மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதரை கையில் எடுத்த பாஜக , தமிழன் ஒரிசாவை ஆள்வதா என்று முழக்கத்தை எழுப்பியவர்கள் தற்பொழுது தமிழ் கடவுள் முருகனை தொடுகிறார்கள். கேரள மாநிலத்தில் ஐயப்பனை வைத்து பாஜக அரசியல் செய்தது அது எடுபடவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மூதாதையர்களின் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானை வைத்து அரசியல் செய்ய பாஜக தற்போது முயற்சி செய்துள்ளது.ஏன் தமிழகத்தில் ஆட்சி புரியும் திமுகவே முருகனை வைத்து சமீபத்தில் மாநாடு நடத்தியது என்று கூறினார். மேலும் பாஜக எவ்வளவு காவடி எடுத்தும் ஆடினாலும் முருகா என்று குரல் கொடுத்தாலும் முருகனுக்கு பதிலாக என்னுடைய முகம் தான் வரும் என்று கூறினார். முருகன் மாநாடே வைத்து தமிழர்களின் ஓட்டை பிரித்து பார்க்க பாஜக முயற்சி செய்கிறது. ஒருவேளை முருகன் நான் தானே நடத்தினால் தமிழில் திரு திருப்புகழ் பாட மாட்டார்கள் ஏனென்றால் அவர்களிடம் ஒரு அரசியல் உள்ளது என்று கூறினார்.