ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா தமிழிசை ?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9eec6f6f1bd35646059a1b3463aecc3c.webp?width=836&height=470&resizemode=4)
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது . கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜக வேட்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அங்கு திமுக வேட்பாளர் கனிமொழியிடம் சில லட்சங்கள் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
அதைத்தொடர்ந்து அவர் புதுவைக்கு துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அத்துடன் தெலுங்கானா மாநில ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு மாநிலங்களிலும் அவர் ஆளுநராக பணியாற்றி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன.
மற்றோரு தரப்போ இல்லைவே இல்லை விருதுநகர் அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.