நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா...? வெளியான முக்கிய அப்டேட்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக இந்த மாவட்டங்களுக்கு இதேபோல் கனமழை எச்சரிக்கை விடப்பட்டதால், இரண்டு நாட்களும் நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், இன்று எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.
இந்தநிலையில் இந்த மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மழையை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மண்டல அலுவலர்கள் முடிவு செய்வர்.