1. Home
  2. தமிழ்நாடு

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியபின் பாராசிட்டமால் தேவையா? - பாரத் பயோடெக் நிறுவனம் புதிய விளக்கம்

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியபின் பாராசிட்டமால் தேவையா? - பாரத் பயோடெக் நிறுவனம் புதிய விளக்கம்


கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பின்னர் வலி நிவாரணிகள், காய்ச்சல் மாத்திரை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என அந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக உள்ளன. இதில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் அதிகளவில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியபின் பாராசிட்டமால் தேவையா? - பாரத் பயோடெக் நிறுவனம் புதிய விளக்கம்

அதன்படி ஜனவரி 3 தொடங்கி 15 வயது முதல் 18 வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த வயது வரம்பில் உள்ள 85 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில தடுப்பூசி மையங்களில் சிறாருக்கு மூன்று பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்பட்டு அவற்றை முறையே மூன்று வேளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியபின் பாராசிட்டமால் தேவையா? - பாரத் பயோடெக் நிறுவனம் புதிய விளக்கம்

இதனையடுத்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டு அறிவிப்பில், கோவாக்சின் தடுப்பூசிக்குப் பின்னர் பாராசிட்டமால், வலி நிவாரணிகள் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கப்படவில்லை என்றும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் ட்விட்டர் பதிவில், 30,000 தனிநபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி மேற்கொண்ட கிளினிக்கல் பரிசோதனையில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டன. அவையும் மிக லேசான அறிகுறிகளாக இருந்தன. ஒன்றிலிருந்து, இரண்டு நாட்களில் அந்த பக்கவிளைவுகளும் மருந்து ஏதும் கொடுக்காமலேயே நீங்கின என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like