1. Home
  2. தமிழ்நாடு

சென்னை கோயம்பேடு இடத்தில் லூலூ மால் வருகிறதா? - தமிழக அரசு சொல்வதென்ன

1

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்துக்கு புறநகர் பேருந்து நிலையத்தை மாற்றியுள்ளது தமிழக அரசு. இதற்கிடையே கோயம்பேட்டில் பெரிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். எனினும், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தில் எந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அதற்குள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை லூலூ மால் அமைக்க வழங்க உள்ளதாக தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின. கோயம்பேடு இடத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்க தமிழக அரசுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றபோது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், கோயம்பேடு நிலத்தை லுலு மாலுக்கு வழங்க உள்ளதாக பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என தமிழக அரசு மறுத்துள்ளது.இதுகுறித்து பேசிய வீட்டு வசதித்துறை செயலர் சமயமூர்த்தி, "கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லூலூ மால் அமைக்க நிலம் தரப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. அடிப்படை ஆதாரமற்ற இந்த பொய்த் தகவலை உண்மை என நம்பி அரசியல் கட்சியினரும், சில தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like