இது உண்மையா ? 500 ரூபாய் நோட்டுகளுக்கு தடை வருகிறதா ?
ஏடிஎம்களில் தற்போது 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் வருகின்றன. இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு வரை, பெரும்பாலான நேரங்களில் 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக வந்தன. பல ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன. இருப்பினும், இப்போது ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வெளிவருவது நிறுத்தப்படும் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது.
500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதத்துக்குள் ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2016ஆம் ஆண்டில் இதேபோல 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்ய்பபடுவதாக திடீரென்று அறிவிக்கப்பட்டது. அதேபோல, இப்போதும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற கவலையில் உள்ளனர்.
500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதத்துக்குள் ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2016ஆம் ஆண்டில் இதேபோல 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்ய்பபடுவதாக திடீரென்று அறிவிக்கப்பட்டது. அதேபோல, இப்போதும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற கவலையில் உள்ளனர்.
500 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று இதன் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே 500 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும். 500 ரூபாய் நோட்டுகளின் செல்லுபடியில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகளின் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற தேவையற்ற பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் தவறான செய்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.