1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்..!

1

யூடியூபில் பிரபலமான க்ரியேட்டரில் ஒருவர் இர்பான். இவர் உள்ளூர் முதல் வெளிநாட்டில் இருக்கும் உணவு வகைகளை உண்டு அதை விடியோவாக பதிவிட்டு வருபவர். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.

ஆலியா என்பவரை திருமணம் செய்துகொண்ட இர்ஃபான், திருமணத்துக்கு பின்னர் தன் மனைவியுடன் சேர்ந்து பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கி உள்ளார் 

இதனிடையே இர்பான் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய மனைவியின் வளைகாப்பு நடைபெற்றது. மேலும், இர்ப்பான் தன்னுடைய மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை ஆவலுடன் தெரிந்து கொள்ள இருப்பதாக கூறி இருந்தார். இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை விதித்ததால் இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்றிருக்கிறார்.அவர் அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிய வந்திருக்கிறது. இதை இவர் கொண்டாடும் விதமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பார்ட்டி வைத்திருக்கிறார். இந்த பார்ட்டியில் பிக் பாஸ் மாயா கலந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிறக்கப் போவது பெண் குழந்தை என்று மகிழ்ச்சியுடன் இர்ப்பான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். 

இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அது என்ன குழந்தை என்பதை வெளியிடுவது சட்டப்படி குற்றமாக இருக்கும் நிலையில், இர்ஃபான் மட்டும் எப்படி வெளியிடலாம் என நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர் 

இந்நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை என்பது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1

Trending News

Latest News

You May Like