கோலாகலமாக தொடங்கியது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா.. மும்பை பேட்டிங் !
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நடப்பாண்டு 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவான 13 வது ஐ.பி.எல். தொடர் அபுதாபியில் இன்று தொடங்கியது.
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் கோலாகலமாக இன்று தொடங்கியது. டாஸ்வென்ற சென்னை அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா - டி காக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். போட்டியின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா பவுண்ட்ரி அடித்து போட்டியை ரன்கணக்கை தொடங்கினார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
newstm.in