1. Home
  2. தமிழ்நாடு

போலீஸ் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்! கொந்தளித்த திமுக வினர்!

போலீஸ் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்! கொந்தளித்த திமுக வினர்!


கன்னியாகுமரியில் காவல்துறை அதிகாரி ஒருவர் மிரட்டியதால், திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் பறக்கையைச் சேர்ந்த சிவராம பெருமாள் (48) மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும், திமுக மருத்துவரணியிலும் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி சீதா அரசு மருத்துவராக உள்ளார். சிவராம பெருமாள் இந்த நிலையில், டாக்டர் சிவராம பெருமாள் தனது வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள கடிதத்தில், தனது தற்கொலைக்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா பணிக்கு சென்றுவிட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. தன்னையும், தனது மனைவியையும் தகாத வார்த்தையால் பேசியதாகவும், போனில் பல நாட்கள் மிரட்டி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சிவராம பெருமாளின் உடலையும், கடிதத்தையும் கைப்பற்றிய சுசீந்திரம் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது தற்கொலைக்கு காரணம் போலீசார் என கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த சம்பவத்தால், காவல்துறையினரை கண்டித்து மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like