1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை ..!

1

பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4-ந் தேதி நடந்தது. 130 மையங்களில் நடந்த தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுதி இருக்கின்றனர். தேர்வுக்கான வினாக் குறிப்புகள் பிப்ரவரி 19-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான நியமன தேர்வில் இறுதி விடை பட்டியில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன பட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 13 வினாக்களுக்கு, வினாவுக்கு என்ன பதிலை தேர்வு செய்திருந்தாலும் மதிப்பெண் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும், 11 வினாக்களுக்கு ஏதாவது 3 பதில்களை தேர்வு செய்தால் மதிப்பெண் என மொத்தம் 24 வினாக்கள் தவறாக இருப்பதால் இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடை தாளின் அடிப்படையில், பணி நியமன பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.வல்லுந‌ர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை பட்டியல் வெளியிட உத்தரவிடவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல் ஜெயந்தி என்பவரும் இதே மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வின் அடிப்படையில் இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிடுகிறேன் என்றும் மேலும் இந்த மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like