1. Home
  2. தமிழ்நாடு

அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்... சென்னையில் தீவிர கண்காணிப்பு!

அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்... சென்னையில் தீவிர கண்காணிப்பு!


கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் பகுதி மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. 

சென்னையில் முழு பொதுமுடக்கத்தை கண்காணிக்க 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோய்தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற வகையில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் வாகனங்களில் செல்லமால் நடந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.


அத்தியாவசிய தேவை இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது. பொதுமுடக்கத்தை கண்காணிக்க சென்னை நகருக்குள்ளேயே 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையின்றி சென்றால் வாகன பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிராதான சாலைகள் கடந்த முறை பொதுமுடக்கத்தைப்போல இந்த முறையும் மூடப்பட்டுள்ளன.  திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற பாஸ் செல்லாது எனவும், அந்த பாஸை புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் உட்புற பகுதிகளிலும் இந்தமுறை சோதனையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like