1. Home
  2. தமிழ்நாடு

திடீரென 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இன்டெல் நிறுவனம்..!

1

ஐடி துறையில் பணிநீக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கலையடையும் செய்தியாக பார்க்கப்படுகிறது.இந்த மாத தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது, இப்போது சிப் தயாரிப்பாளர் இன்டெல் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வேலை நீக்கத்திற்கு தயாராகி வருகிறது.

இன்டெல் நிறுவனம், இந்த மாதத்தில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கலிபோர்னியா, அரிசோனா, டெக்சாஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் பொறியாளர்கள், மூத்த நிர்வாகிகள், நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோர், இதில் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு மாதம் தொழில்நுட்பத் துறையில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

மைக்ரோசாப்ட் சமீபத்தில் 9 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்த நிலையில், அதைப் பின்பற்றி இன்டெல் நிறுவனமும் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடுமையான சந்தைப் போட்டி, நிதி இழப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் பின்தங்கியது போன்ற காரணங்களால் இன்டெல் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like