1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் மேடைகளில், மறைந்த தலைவர்களை இழிப்பதும் பழிப்பதும் ஏற்கத்தக்கவை அல்ல - வைரமுத்து கண்டனம்!

1

நாம் தமிழர் கட்சியின் சீமான் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கிறார்.இந்தத் தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் தனித்தே போட்டியிடுகிறது. 40 தொகுதிகளிலும் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் சீமான்.

இந்நிலையில், கடந்த மார்ச் 29-ம் தேதி ராமநாதபுரம் வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், திருடன் கதையைச் சொல்லி, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் பேசினார். இதற்கு திமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சீமானின் பேச்சைக் கண்டித்து சுப.வீரபாண்டியன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில்,அப்பா திருடன் - கருணாநிதி மகன் திருடன் - ஸ்டாலின் மூன்றாவதாக பேரன் திருடன் தயாராகி கொண்டிருக்கிறார். என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பரும், கவிஞருமான வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜப்பானில் நிலநடுக்கமும், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பும், தேர்தல் மேடைகளில் இழிமொழிகளும் அபூர்வமல்ல. ஆனால், மறைந்த தலைவர்களை இழிப்பதும் பழிப்பதும் ஏற்கத்தக்கவையல்ல.

சிறுகூட்டம் ரசிக்கும்; பெருங்கூட்டம் வெறுக்கும். மேடை நாகரிகமும் உள்ளிட்டதே தமிழர் பண்பாடு’ என்று சாடி இருக்கும் வைரமுத்து, கருணாநிதி குறித்த தரக்குறைவான சீமான் பேச்சையும் தனக்கே உரிய கவிதை மொழியில் கண்டித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like