பெட்ரோல் பங்குகள் செயல்படும் கால நேரம் நீட்டிப்பு- விவரங்கள் உள்ளே!!
கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், 4ஆம் கட்ட தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு 10 மணி வரை செயல்பட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.