1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்... செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி...?

1

கடந்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார் செல்வப்பெருந்தகை. இவர் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். கடுமையான போராட்டதை தொடர்ந்து இந்த பதவி அவரக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக அவரது சொந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதாவது செல்வப்பெருந்தகை கட்சிக்கு கட்டுப்படாமல், தனித்து செயல்படுவதாகவும், முடிவுகளை சுயமாக எடுப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை, நிர்வாகிகள், செல்வப்பெருந்தகை மீது வைத்துள்ளனா். மேலும் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வலுவிழந்து வருவதாக அக்கட்சியை சேர்ந்தவர்களே பல முறை கூறி வந்தனா்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி விவகாரம் தலைதூக்கியதை உணர முடிந்தது. இதற்கிடையே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் தமிழ்நாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மனுக்களை கொடுத்து வருகின்றனா். இதற்காக அவர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனா்.

காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தியிடம் புகாரை கொடுத்தனா். இதனால் செல்வப்பெருந்தகைக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. மாணிக்கர் தாகூர், செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்யும் வகையில் பேசி இருந்தார்.


அவரது பேச்சுக்கு தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்து உள்ளார். மேலும் தன்மீது அதிருப்தி நிர்வாகிகள் கொடுத்த புகாருக்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை," தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை.

நல்லாட்சி நடந்தாலே காமராஜர் ஆட்சிதான். காமராஜர் ஆட்சியா? நல்லாட்சியா? என புரிதல் இல்லாமல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கமிட்டியை சீரமைக்கும் பணியை செய்கிறோமே தவிர, வேரறுக்கும் பணியை செய்யவில்லை" என கூறி உள்ளார்.

Trending News

Latest News

You May Like