தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதும் முதல் திருநங்கை இந்திரஜா..!

இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 5,736 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். நுழைவு வாயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை திறந்திருக்கும்.
தங்கள் குழந்தைகளை தேடுவது அழைத்து வந்த பெற்றோர்களிடம் செய்தியாளர்கள் பேசுகையில் மதுக்கரையைச் சேர்ந்த ஒரு பெற்றோர் கூறியதாவது:-
எனது மகளையும் நான் இன்று தேர்வு எழுத அழைத்து வந்தேன். எனது மகள் கோவை சிஐடி வளாகத்தில் தேர்வு எழுத உள்ளார். இங்கு பெற்றோர்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. ஏற்பாடுகளை இன்னும் சற்று கவனத்துடன் செய்திருக்கலாம். தேர்வு எழுதும் பெண்களுக்கு இயற்கையான சில சிக்கல்கள் இருக்கும். அதை கருத்தில் கொண்டு சில ஏற்பாடுகளை கவனத்துடன் மையங்களில் வழங்க வேண்டும். குறிப்பாக மாணவிகளுக்கான கழிவறைகள் மீது சற்று கவனத்தை அதிகமாக செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
இவ்வாறு கூறினார்.
மற்றொரு மாணவரின் தந்தை பேசுகையில், அரசு தரப்பில் பயாலஜி பாடப்பிரிவை 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்கள் படிக்கும்போது நீட் தேர்வுக்கான வகையில் அந்த பாடத்திட்டம் இருக்கும் வகையில் முயற்சிகள் இருந்தால் பொருளாதார ரீதியாக வலிமையாக இல்லாத குடும்பத்தில் இருந்து வரக்கூடிய மாணவ மாணவிகளும் இந்தத் தேர்வுக்கு இன்னும் சிறப்பாக தயாராக முடியும். எனவே வரும் காலங்களில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயாலஜி பாடகட்டத்திலேயே நீட் தேர்வுக்கு தயாராக கூடிய விஷயங்களை உள்ளடக்கி பாடத்திட்டம் அமைத்திருக்கும் படி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த தேர்வுக்கான ஒரு மையமான
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் திருநங்கையான இந்திரஜா நீட் தேர்வு எழுத உள்ளது கவனம் பெற்று வருகிறது.