1. Home
  2. தமிழ்நாடு

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

1

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அதிகளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். டெல்லியிலிருந்து நாள்தோறும் வெளி மாநிலத்திற்கும், வெளி நாட்டிற்கும் அதிகளவில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து வாரணாசிக்கு நேற்று அதிகாலை 5.35 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

பயணிகளும் விமானத்தில் அமர்ந்த நிலையில் வாரணாசிக்கு புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில்  வெடிகுண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகளை அவரசகால கதவு வழியாக விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பாக இறக்கிவிட்டனர்.

விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த tissue paper-ல் BOMB என்ற வார்த்தை எழுதப்பட்டு இருந்த நிலையில், இதனை பார்த்த விமான பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.தகவல் அறிந்து வந்த  வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு அகற்றும் குழுவினர், தீயணைப்பு துறையினர் என பாதுகாப்பு குழுவினர் விமானத்தை சோதனை செய்தனர். 

Trending News

Latest News

You May Like