அலட்சியம்! சாலையில் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்!!

கொரோனா பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்ட பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்ததால் பொது மக்கள் அச்சமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி சாலையில்தான் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்ட மருத்துவ பொருட்கள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிதறிக் கிடந்த பரிசோதனை மாதிரி பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு முகாம்களிலும் சேகரிக்கப்பட்ட கொரோனா மாதிரிகள் பெத்தநாயக்கன் பாளையம் மையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு இருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தலைவாசல் பகுதியில் முகாம் வாயிலாக சேகரிக்கப்பட்ட மாதிரிகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் போது சிதறியிருக்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இனிவரும் நாட்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
newstm.in