1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் நிறுத்தம்... இன்று மீண்டும் தொடரும்.. நடுவர்கள் அறிவிப்பு!

1

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக ஆடினார். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் சாஹின் அப்ரிடி பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசினர்.

அதிரடியாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்தனர். ரோகித் 56 ரன்களிலும்,கில் 58 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். இதன் பின்னர் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஜோடி நிதானமாக ஆடத் தொடங்கினர்.24.1 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது இருந்தபோது போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்தில் மழை நின்று ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்க பட்ட  நிலையில் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. ஒரு வழியாக மைதானத்தின் ஈரப்பதம் நீக்கப்பட்டு ஆட்டம் 9 மணிக்கு தொடங்கும் 34 ஓவர்கள் கொண்ட போட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால் 8.45 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

இதனால் நடுவர்கள் இன்றைய நாளிற்கான ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டம் மீண்டும் 3 மணிக்கு தொடங்கப்படும் என்றும், இந்திய அணி 24.1 ஓவர்களில் இருந்து பேட்டிங்கை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்படவில்லை என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like