1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா - பாக் போர் பதற்றம் : ரயில்வே ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Q

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இந்த தாக்குதலால் பாகிஸ்தானுக்கு மரண அடி விழுந்தது. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதனால், இந்தியா மீது எந்த வகையிலாவது தாக்குதலை தொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.
ரயில்வே ஊழியர்களுக்கு எச்சரிக்கை
அதில் ஒன்றாக, இந்திய ராணுவத்தில் சேவையில் உள்ள ரயில்களின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு சேகரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, ரயில்வே ஊழியர்களுக்கு இந்திய ரயில்வே ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.
தகவல் தெரிவிக்கக் கூடாது
அதில், தங்களுக்கு தெரியாத நபர்களிடம் இந்திய ரயில்வே தொடர்பாகவோ, இந்திய ராணுவம் தொடர்பாகவோ, இந்திய ராணுவ ரயில் சேவை தொடர்பாகவோ எந்த வித தகவல்களையும் தெரிவிக்கக் கூடாது. மேலும், தங்களுக்கான பணிகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like