1. Home
  2. தமிழ்நாடு

இந்திய மக்களுக்கு - நம்பிக்கை தரும் அறிவிப்பு !!

இந்திய மக்களுக்கு - நம்பிக்கை தரும் அறிவிப்பு !!


மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் ; கொரோனா பெருந்தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 96,173 அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் , 13,940 கொரோனா நோயாளிகள் குணமாகியுள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,85,636 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.24 விழுக்காட்டை எட்டியுள்ளது. தற்போது 1,89,463 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இந்திய மக்களுக்கு - நம்பிக்கை தரும் அறிவிப்பு !!

தொற்றை பரிசோதனை செய்யும் பரிசோதனைச் வசதிகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக , இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கடந்த 24 மணி நேரத்தில் 11 புதிய பரிசோதனைச் சாலைகளை சேர்த்துள்ளது.

இந்தியாவில் கொரோனா கண்டறியும் 1,016 பரிசோதனைச் சாலைகள் இப்போது உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் மையங்கள் 737, தனியார் பரிசோதனைச் சாலைகள் 279. ஒவ்வொரு நாளும் பரிசோதனை செய்ய வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,15,446 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 77,76,228 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like