1. Home
  2. தமிழ்நாடு

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம் !

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம் !


லடாக் எல்லையில் சீனா ஒருபக்கம் பிரச்னை செய்து வரும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி தொடர்கதையாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் புகுந்து பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம் !

இந்நிலையில், தற்போது நடந்த தாக்குதல் சம்பவத்தில் 2 தீவிரவாதிகள், இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டம், சிங்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அதிகாலையில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் அங்கு விரைந்து குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம் !

பாதுபாப்பு படையினர் நெருங்குவதை அறிந்த அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தகவலை காஷ்மீர் மண்டல காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like