1. Home
  2. தமிழ்நாடு

இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!

Q

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூயார்க்கில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். இந்த முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இந்திய அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையிலே இருந்தது. அதன் பிறகு 10 ஓவர்களை கடந்தவுடன் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சானது மிகச்சிறப்பாக அமைந்தது. இதன் மூலம் ரிஷப் பண்ட், சிவம் துபே, ஜடேஜா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுக்க முடியாமல் திணறியது.

இதன் காரணமாக இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 31 பந்துக்கு 42 ரன்கள் எடுத்திருந்தார். 

 120 என்ற எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான் (31) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த அணி 20 ஓவரில் 113/7 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Trending News

Latest News

You May Like