1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா அபார வெற்றி..!!

Q

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.14) மதியம் 02.00 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி, 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் பாபர் ஆசம் 50 ரன்களையும், முகமது ரிஸ்வான் 49 ரன்களையும், இமாம் உல் ஹக் 36 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

பின்னர், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

பின்னர் களமிறங்கிய IND வீரர்கள் அதிரடியாக ஆடினர். குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா, PAK பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். இதனால், 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்த IND அணி, தொடர்ச்சியாக தனது 3வது வெற்றியை பதிவுசெய்தது.

Trending News

Latest News

You May Like