1. Home
  2. தமிழ்நாடு

இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்... 6 பேர் டக் அவுட்

Q

இந்தியா தென் ஆப்பிரிக்கா இருஅணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

முதல் இன்னிங்சில் தெ.ஆப்., அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், அந்த அணி  55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது..

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணியும் தற்போது ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 46 ரன்கள் குவித்தார். 6 பேர் டக் அவுட் ஆனதும் முக்கியமானது. ஆனாலும் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like