டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/61f6889bbfd17b5177baaf384b5df16c.jpg?width=836&height=470&resizemode=4)
டெல்லி உள்பட, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இதே நிலைமை தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்திலும், மத்திய பிரதேசத்தின் வடக்கு பகுதிகளிலும் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடுமென ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 18-ம் தேதி அன்று ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத்தில் ஒருசில பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் வெப்பம் பதிவாகியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். உச்சபட்சமாக, ராஜஸ்தானின் பார்மரிலும், உத்தர பிரதேசத்தின் கான்பூரிலும் 46.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.