1. Home
  2. தமிழ்நாடு

மரண பயம் காட்டிய இந்தியா.. விமான நிலையங்களை இழுத்து மூடிய பாகிஸ்தான்!

Q

இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு சிந்தூர் ஆபரேஷன் என்ற பெயரிடல சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. இதில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத முகாம்களின் தலைமையிடம் மற்றும் பயிற்சி இடங்கள் மீது இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
சுமார் 9 இடங்களில் இந்திய ராணுவம் சிந்தூர் ஆபரேஷன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களில் இந்தியா தனது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விமான நிலையங்களை உடனடியாக மூடியுள்ளது.
லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி விமான நிலையங்களை சனிக்கிழமை மாலை 6 மணி வரை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு மே மாதத்தில் கராச்சி மற்றும் லாகூர் விமான தகவல் பிராந்தியங்களின் குறிப்பிட்ட பகுதிகளை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அதன்படி தடைசெய்யப்பட்ட வான்வெளி மே 1 முதல் மே 31 வரை உள்ளூர் நேரப்படி தினமும் அதிகாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை மூடப்படும் என அறிவித்திருந்தது.
தொடர்ந்து இந்திய விமான நிறுவனங்களும் சேவையிலும் மாற்றம் செய்துள்ளன. ஸ்பைஸ்ஜெட் மற்றும் பிற விமான நிறுவனங்கள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பல விமான நிலையங்களுக்கு விமான சேவை குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.
வட மாநிலங்களுக்கான விமான சேவை பாதிக்கப்படும் என்று ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ அறிவித்துள்ளன. மேலும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு அப்டேட்டுகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தியுள்ளன.
தர்மஷாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்பாடு, வருகை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் விமானங்களும் பாதிக்கப்படும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மே 7 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை ராஜ்கோட், பூஜ் மற்றும் ஜாம்நகர் ஆகிய இடங்களுக்கான விமானங்கள் பாதிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா மே 7 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அமிர்தசரஸுக்குச் செல்லும் இரண்டு சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்படுகின்றன என்றும் இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதனிடைய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான சமூக ஊடகப் பதிவில், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர் மற்றும் தர்மசாலா ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், தற்போதைய வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக பிகானருக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களும் பாதிக்கப்படும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like