உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்தியா: நடிகர் ரஜினிகாந்த்..!
இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி நேற்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தியுள்ளது.நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இஸ்ரோவுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார்.
While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
— Rajinikanth (@rajinikanth) August 23, 2023
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations…