பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி..!

மகளிருக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.
இந்த மேட்ச்சில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 58 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தனது 2 ஆவது ஆட்டத்தில் இந்திய அணி, தற்போது பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நிடா தார் 28 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டும் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சபாலி வர்மா 32 ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களும் அடித்தனர்.