ஊக்கத்தொகை அறிவிப்பு – குஷியில் ஊழியர்கள்!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, அதிகாரிகளிடம் தமிழக கூட்டுறவுத் துறை விவரம் கோரி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தின் போது, நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அதன்படி, மாதந்தோறும் பொது விநியோக திட்டத்தின் மூலம் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் பணியாக மாஸ்க் வழங்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக கார்டு ஒன்றுக்கு தலா 50 காசுகள் என்ற வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 27 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.
இதற்காக முகக் கவசம் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களின் விவரங்களை விரைவில் அனுப்பும்படி அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நியாய விலைக் கடைகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in