முக்கிய அறிவிப்பு..! நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை!

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா, தங்கள் ராணுவத்தை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மே 7ந் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு ஒத்திகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அன்றைய தினம் போர் ஒத்திகை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலை அனுப்பி உள்ளது. அதன்படி வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கை சைரன் நிறுவு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திடீர் தாக்குதல் தொடங்கினால் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து ஒத்திகை அன்றைய தினம் நடக்க உள்ளது.
நாடு முழுவதும் நாளை மறுநாள் நடைபெற உள்ள போர் கால ஒத்திகையின்போது என்னென்ன நடக்கும் என்பது பற்றி பார்ப்போம். முதலில் அண்டை நாடான பாகிஸ்தான், திடீரென வான்வெளி தாக்குதல் நடத்த முயன்றால், அதனை இடைமறித்து அழிக்கும் ராணுவ எந்திரங்கள் தடுத்துவிடும். அப்போது மக்கள் பதற்றத்தை குறைக்க முன்னெச்சரிக்கையாக சைரன் ஒலிக்கப்படும்.
அந்த சைரன்களை நிறுவும் பணிகளையும் மத்திய அரசு தொடங்க உள்ளது. இது தவிர போர் காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தீயணைப்பு, போர்கால மீட்பு குழுக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒத்திகை செய்யப்படும். பொதுமக்கள், மாணவர்கள் என அனைவருக்கும் போர் காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி ஒத்திகை செய்யப்படும்.
போர் காலத்தில் நமது நாடு மற்றும் நாட்டு மக்கள் தயாராக இருக்கிறோம் என எதிரிக்கு உணர்த்துவதற்காக இந்த போர் ஒத்திகை நடத்தப்படுகிறது. மின் தடை, உட்கட்டமைப்பு சேதம் போன்ற போர் கால சூழலில் மக்கள் எப்படி கையாள வேண்டும் என்று மாநிலங்கள் இந்த ஒத்திகையை நடத்த வேண்டும் என கூறி உள்ளது. பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.