பட்ஜெட்டில் வெளியான சோலார் மின்சார திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..!
நடந்து முடிந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.அதில் மிக முக்கியமான ஒரு அறிவிப்புதான் பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டம்.
பிரதமர் மோடி ஏற்கனவே பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தை தனது உரைகளில் பலமுறை குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த லட்சியத் திட்டத்தை அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்பது மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான ஒரு சிறப்புத் திட்டமாகும்.
பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ், மேற்கூரை சோலார் அமைப்பை நிறுவுவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ் நாட்டின் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்று கூறப்பட்டிருந்தது. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு சோலார் பேனல்கள் மூலம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஒரு குடும்பம் பயன்படுத்த முடியாமல் போனால், கூடுதல் மின்சாரத்தை அரசுக்கு விற்கலாம் என்பதும் இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தில் நிறையப் பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
.png)