நாடு முழுவதும் பறந்த முக்கிய அறிவிப்பு! 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்..!

இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ தாக்குதலின் மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத பயிற்சி முகாம்களை தரைமட்டமாக்கி உள்ளது. இதனை பொருத்துக்கொள்ளாத பாகிஸ்தான் இந்தியாவை தாக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து தாக்க முயன்றது. ஆனால் இந்தியா அதனை முறியடித்தது.
இச்சூழலில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பிளாக் அவுட் என சொல்லப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதிகளில் சைரன்கள் சத்தம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு ஒன்று பறந்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுக்காப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு விமான நிலையங்களை மே 11ஆம் தேதி வரை மூட உத்தரவிட்ப்பட்டிருந்தது.
இச்சூழலில் எஞ்சி இருக்கும் விமான நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
இதனால் விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா ஒரு முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதாவது இந்தியா - பாகிஸ்ஹான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் விமானம் புறப்படும் 75 நிமிடங்களுக்கு முன்பு செக் இன்கள் மூடப்படும் என்றும் அறிவுறுத்தி உள்ளது