நான் ஒரு சூப்பர் ஹீரோ..! டெஸ்ட் செய்ய 4வது மாடியில் இருந்து குதித்த மாணவர்!

கோவை மாவட்டம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வரும் 19 வயதான பிரபு, தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நம்பி வாழ்ந்து வந்துள்ளார். தன்னிடம் சக்தி இருப்பதாக சக மாணவர்களிடம் பலமுறை கூறி வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை கூட கல்லூரி விடுதியின் 4வது மாடி வராண்டாவில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர்கள் கொடுத்த சவாலின் பேரில், திடீரென ஓடி வந்து அங்கிருந்து குதித்தார். இதனால் அவரது கால்கள் மற்றும் கைகள் உடைந்தன. தலையில் பலத்த காயம். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சூப்பர் பவர் உள்ளதாக நினைத்து கோவை தனியார் கல்லூரி விடுதியின் 4 வது மாடியில் இருந்து குதித்த மாணவர் பிரபு கால் மற்றும் கை எலும்பு உடைந்து படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ… pic.twitter.com/DjooQ4XvqY
— விகடன் (@vikatan) October 29, 2024
சூப்பர் பவர் உள்ளதாக நினைத்து கோவை தனியார் கல்லூரி விடுதியின் 4 வது மாடியில் இருந்து குதித்த மாணவர் பிரபு கால் மற்றும் கை எலும்பு உடைந்து படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ… pic.twitter.com/DjooQ4XvqY
— விகடன் (@vikatan) October 29, 2024