1. Home
  2. தமிழ்நாடு

1,200 ஆண்டு பழமையான கோவிலில் இளையராஜா சுவாமி தரிசனம்..!

1

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா வாணியம்பாடியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதிதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கோயிலுக்கு வந்த இளையராஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், சரஸ்வதி, முருகர், தட்ணாமூர்த்தி சன்னதிகள் மற்றும் சுயம்பு வடிவில் கருவறையில் உள்ள ஸ்ரீ அதிதீஸ்வரர் சிவனை, இளையராஜா பயபக்தியுடன் வழிபட்டார். பிறகு, கோயில் வளாகத்தை சுற்றி வந்த இளையராஜா ஒவ்வொரு சந்நதியிலும் சுவாமியை வழிபட்டார். அவருக்கு, கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


வாணியம்பாடி வட்டம் பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதிதீஸ்வரர் கோயில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் இக்கோயிலும் இடம் பெற்றிருப்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசிக்கின்றனர். மேலும், பிரபலங்களும் அவ்வப்போது இக்கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபடுகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like