1. Home
  2. தமிழ்நாடு

பின்னணிப் பாடகி பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா!

1

இளையராஜாவின் மகள், பின்னணி பாடகி பவதாரிணி கடந்த 25ம் தேதி மாலை புற்றுநோயால் இலங்கையில் காலமானார். இந்த செய்தி ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் தேனியில் உள்ள இளையராஜாவின் சொந்த இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணிக்கு தான் இறக்கப் போகிறோம் என்ற செய்தி ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும் எனவும் அதனால், தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டார் எனவும் சொல்லப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையிலேயே இயக்குநர் வெங்கட்பிரபு, பவதாரிணி குடும்பத்துடன் எடுத்த கடைசிப் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

இந்த சூழ்நிலையில்தான் பவதாரிணியின் கடைசி ஆசையை இளையராஜா நிறைவேற்றியுள்ளார். இந்த விஷயத்தை இலங்கைக்கு பவதாரிணி சிகிச்சைக்காக சென்றபோது அங்கு உதவியாளராக இருந்தவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதாவது, இலங்கையில் நடக்க இருந்த இசை நிகழ்சிக்கான வேலையில் இளையராஜா மும்முரமாக இருந்தாராம். அப்போது பவதாரிணி தனது அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். இதனால், பவதாரிணி தங்கியிருந்த அறைக்கு அருகிலேயே இளையராஜாவுக்கும் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர் இறப்பதற்கு முந்தின நாள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இளையராஜா அவருடன் நேரம் செலவிட்டுள்ளார். தனது தந்தையுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசையை பவதாரிணி இறப்பதற்கு முன்பு நிறைவேற்றி இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News

Latest News

You May Like