1. Home
  2. தமிழ்நாடு

மண்பாண்டங்களை பயன்படுத்தினால் நீண்ட வருடம் நோய் நொடியின்றி வாழலாம்..!

1

கோடை காலம் தொடங்கியதால் மண்பானை விற்பனை சூடு பிடித்துள்ளது.அதனுடன் ஜக்கு, குவளை போன்ற மண்பாண்ட பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளன. குழாயில் பொருந்திய மண்பானை ஐம்பது முதல் 500 ரூபாய் வரையிலும், ஜக்கு போன்றவை 200 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. பிளாஸ்டிக் கேன்களுக்கு மாற்றாக விற்பனைக்கு வந்துள்ள குழாய் பொருந்திய மண்பானைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

மண்பாண்டத்தின் பயன்

"மண்பாண்டத்தின் பயன் என்னவென்றால் மண்பாண்டத்தில் உணவு சமைத்து சாப்பிட்டவர்கள் நூறு அல்லது 120 வயது வரை வாழ்ந்துள்ளனர்.மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்தால் தண்ணீரில் இருக்கின்ற அமிலத்தன்மை உப்பு ஆகியவற்றை இந்த மண்பானை உறிஞ்சி தூய்மையான நீரை கொடுக்கும். இது மட்டுமில்லாமல் மண்பாண்டங்களில் உணவு சமைத்தால் அந்த உணவு மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளால் பல்வேறு விதமான நோய்கள் மனிதர்களை அதிகம் தாக்குவதாகவும், அவற்றை தவிர்க்க வேண்டும் என்றால் மண்பாண்டங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

மினரல் வாட்டர் வாங்கி குடிப்பதை விடுத்து மண்பானையை வீட்டில் வாங்கி வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து அந்த தண்ணீரை குடிக்க வேண்டும் என்றும், இந்த வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் தண்ணீர் கிடைக்கும்.

மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால்,  உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக்  காரணம்.

மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள்  நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில்  அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

மண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள்  மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண்பாண்டங்களே சிறந்தவை.

பலவித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் மண்பாண்டங்கள், கோடை காலத்திற்கு மட்டுமல்ல, எல்லா காலங்களுக்கும் ஏற்றது. 

Trending News

Latest News

You May Like