"கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்"... இணையத்தில் வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் முகநூல் பதிவு..!

நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் எச்சரிக்கை விடும் வகையில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
ஹீரோவாக நடித்து வந்த ராஜ்கிரண் சில கால இடைவெளிக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் களமிறங்கினார். இயக்குநர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட ராஜ்கிரண் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்துக்கொள்ள சோஷியல் மீடியாவை பயன்படுத்திக் கொள்வார். இந்நிலையில், இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், இஸ்லாமிய சமூகத்தின் எதார்த்த குணம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு
அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,
எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,
அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,
செய்து கொண்டு, அமைதியாக
வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,
இயலாமையோ, கோழைத்தனமோ,
அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...
"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்",
பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர்,
இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும்
பின்பற்றுவதால்,
பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்...
இந்தப்பொறுமையை,
தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட
கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,
அதன் விளைவு மிக மோசமாயிருக்கும். “ என பதிவிட்டுள்ளார்.