மோடிக்கு ஓட்டுப் போடுவோம் சொன்னால் கணவர்களுக்கு சாப்பாடு போடாதீங்க..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/1d4208b641044bf177412482c161062f.jpeg?width=836&height=470&resizemode=4)
டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, நாடாளுமன்ற மக்களவையிலும் குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் பெண்களுடன் கலந்துரையாடினார். 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது –
பல ஆண்கள் பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை உங்களால் மட்டும் தான் சரி செய்ய முடியும். உங்கள கணவர், மோடிக்கு தான் ஓட்டு என்று சொன்னால், அவருக்கு இரவுச் சாப்பாடு பரிமாறாதீர்கள்.
ஒவ்வொரு கணவரும் மனைவிமார்களின் பேச்சைக் கேட்க வேண்டும். அப்படித்தானே? மனைவி தன் மீது கணவரை சத்தியம் செய்ய வைத்துவிட்டால், மனைவிக்கு கட்டுப்பட்டு தானே ஆக வேண்டும். ஆம் அத்மிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என சத்தியம் செய்ய வையுங்கள்.
கெஜ்ரிவால் உங்களுக்கு இலவச மின்சாரம், பேருந்து பயணம் எல்லாம் கொடுத்தார். இப்போது, மாதம் ரூ. 1000 கொடுக்கிறார் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். பாஜக உங்களுக்கு என்ன செய்து விட்டது? பின்னர் அவர்களுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்?
எல்லா பெண்களுக்கும் ரூ. 1000 கொடுத்து கெஜ்ரிவால் பணத்தை வீணடிக்கிறார் என்று அவர்கள் (பா.ஜ.க) கூறுகிறார்கள். பெரும் கடன்களை தள்ளுபடி செய்த போது, பணத்தை நீங்கள் வீணடிக்கவில்லை?
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற பெயரில் மோசடி நடந்து வருகிறது. இப்போது வரை, அவர்கள் கட்சியில் இருந்து ஒரு பெண்ணை புகழ்ந்து பேசுவார்கள். அப்புறம் பெண்கள் அதிகாரம் பெற்றுவிட்டார்கள் என கூறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.